Tuesday, December 2, 2008

மும்பை


நட்சத்திர விடுதிகளில்
வாண வேடிக்கை

ரயில் நிலயத்தில்
கிரீஸ் கறைக்குப்பதிலாய்
ரத்தக் கறைகள்

மருத்துவமணையில்
Terror Operation


வந்தார்கள்
கொண்றார்கள்
மாண்டார்கள்
இந்தியர்கள் அதை
வெண்றார்கள்

Monday, December 1, 2008

என் பெய்ர் சொல்லாமல்
நீ ஆரம்பித்த
உறையாடலில்
உடைந்து போனது
மனம்

Tuesday, August 5, 2008

பேசுவதற்கு நிறைய இருக்கிறது

நேற்று கனவில் எழுதிய

மு..க் கவிதை பற்றியும்

பீரிட்டுவரும் என்

வி... நிறப்ப காதிருக்கும்

வெள்ளை காகிதம் பற்றியும்



எப்போது பேசுவது

காத்திருகிறேன்

வெள்ளை காகிதம் போல்

Wednesday, February 13, 2008

கனவுகள் ததும்பும்

கருவிழிகள்

அதை கண்னாடி

திரையிட்டு மறைகின்றாய்



உணர்வுகள்

மிளிரும் சிறு இதழ்கள்

புன்னகை பூசி

மழுப்புகின்றாய்



கோபமோ வெட்க்கமோ

கோவை பழமென

சிவக்கும் கன்னங்கள்

அந்த சிவப்பையும்

ஒற்றி எடுகிறாய் கைகளால்



எல்லாம் மறைத்தாய்

அழகுதான் .. ரசித்தேன்..



அன்பும் பாசமும்

ததும்பும் உன் இதயத்தை

மறைக்காதே

மரித்து விடுவேன்



நாளை கிழிப்பதற்க்காய்

காத்திருக்கும்

தின காலன்டர் போல

காதிருகிறேன்

உன் வார்த்தைக்காய்



கிழித்துவிடதே

என் இதயத்தை ...

Wednesday, August 15, 2007

தோழியும் காதலியும் - ஆகஸ்ட் 15

என்னால்
மறந்து போக முடியாத
ஒரு முகத்தை
மறக்கமுடியாத
நாளான ஆகஸ்ட் 15, 1999
அன்று சந்தித்தேன்
முதலில் தோழியானாள்
பின்பு காதலியானாள்
அதன் பிறகு மனைவியானாள்
இன்று தாயாய் அவளை
தினம் தினம் சந்திக்கிறேன்
தோழியும் காதலியும்
கானாமல் போனதில்
கொஞ்சம் வருத்தம்தான்
வேரொரு ஆகஸ்ட் 15தில்
அவர்கள் இருவரையும்
மீண்டும் சந்திப்பேன்
என்ற நம்பிக்கையில்
அவளுக்கு
சுதந்திரதின வாழ்துக்களை
கூற விரைகிறேன்

Monday, August 13, 2007

முன்பிருந்த நான்

என் எண்ணங்களில்
நீ இல்லை
வண்ண கனவுகளில்
நீ இல்லை
உள்ளத்தில் இல்லை
உணர்வுகளில் இல்லை
காரணம்
நானே நீயாகியிருப்பதால்
ஆத்மா ஒன்றுதான் என்றாலும்
முன்பு நான் ஆணாக இருந்தேன்
இப்பொழுது பெண்ணாகியுள்ளேன்
எனக்கு இப்பொழுது
ஒரு கவலை
முன்பிருந்த என்னைவிட
இப்பொழுதுள்ள என்னை
கொஞ்சம் better ஆக
உருவாக்கிவிட வேண்டும் என்பதுதான்

Thursday, August 9, 2007

பூமிக்கு ஒரு விசிட்

நீ
பிறக்கவுமில்லை
இறப்பதுமில்லை
சும்மா பூமிக்கு ஒரு விசிட் வந்திருக்கிறாய்
பூமியெங்கும் பூக்கள் ரெட்டிப்பாய் பூத்திருக்கின்றன
உன்னை வரவேற்க

வந்த இடத்தில்
இன்று நீ
என்னுடயதாய்
நான் உனக்குமாய்
மேலும் கீழுமாய்
முன்னும் பின்னுமாய்
அம்மாவிற்கு ஆதாரமாய்
உற்றார்க்கு சந்தோஷமாய்
பின்னாளில் நீ
பெண்னாய், மனவியாய், தாயாய்
நீ செய்யப்போகும் தொழிலோ,
கலையோ சார்ந்த
ஒரு நபராய்
மற்றும் பலவுமாய் அறியப்படுவாய்
.............
..............
நான் எபோதும் நீ
நல்ல மனுஷியாய்,
நீ நீயாய்
இருப்பதயே, அறியப்படுவதயே
விரும்புகிறேன்
.........
............
போகும் இடத்தில்
நீயோ நானோ இருக்கப்போவதில்லை
இரண்டு ஆத்மாக்கள்
நேருக்கு நேர், சம தளத்தில்
சந்தித்துக்கொள்ளலாம்
அதுவும் தற்ச்செயலாக
பிறகு மீன்டும் விசிட் போகலாம்
யாருக்குத்தெரியும்